கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காலத்தின் முன் கையறு நிலையராய்...

Sunday, January 02, 2005

Tsunami - Aftermath

இறுதியாய் புலிகளின் சமாதானச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வடகிழக்கில் கிட்டத்தட்ட 19000 மக்கள் இறந்தும், 11000 பேர் காணாமலும் போயிருக்கின்றனர். சூனாமியால் ஏற்பட்ட இழப்பு 30000ற்கு அதிகமாகிவிட்டது என்று தெரிகிறது. இதைவிட தெற்குப்பகுதியிலும் ஆயிரக்கணக்கில் மக்களை இழந்துவிட்டோம். இருபது வருட போரில் இறந்துபோனவர்களைப் போல அரைமடங்கான மக்களை ஒரு நாளில் இயற்கையினால் தொலைத்துவிட்ட கொடுமையை சென்ற ஆண்டு தன் கரிய கரங்களால் எழுதிவிட்டுப் போய் விட்டது.
.................
இன, மத பேதமில்லாமல் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று வரும் செய்தி ஆறுதலிக்கிறது. முஸ்லிம் மக்களுக்காய் குறிப்பிட்ட தொகையை தமிழர் புனர்வாழ்வுக்கழக்கம் வழங்கியிருப்பதும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சிங்களக்குடும்பங்களுக்கு நிவாரணப்பணிகளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முன்னின்று செய்வதும் நம்பிக்கை தரும் விடயங்கள். ஈழத்தில் ஏனைய பகுதியில் வாழும் சிங்களமக்களும் (not the damn politicans and racists) விரிந்த மனதுடன் உதவிகளை தமிழ் மக்களுக்கு செய்துகொண்டிருப்பபதுவும் குறிப்பிடத்தக்கது. புலிகளின் கடற்படை சிறப்புத்தளபதி சூசை ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு சிங்களக் குடிமகன்தான் தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சடலங்களை அப்புறப்படுத்துவதில் முன்னின்று உழைத்துக்கொண்டிருப்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்திருந்தார்.
.................
சூனாமியின் aftermathதான் இன்னும் பயங்கரமாய் இருக்கும்போல இருக்கிறது. முக்கிய பிரச்சினை தொற்றுநோய்கள் பரவும் அபாயம். சரியான வழியில் சுகாதாரச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், சூனாமியால் இறந்தவர்களைவிட இன்னும் அதிகமானவர்களை இழக்கவேண்டிய அபாயம் உண்டு என்று அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் எச்சர்த்துள்ளது. மற்றது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் கடந்துசெல்லவேண்டிய உளவியல் பிரச்சினைகள். ஒரு செய்தியில் எழுதப்பட்டது போல, "..But psychological and behavioral problems are certain to become more important as the authorities gain control over the life-threatening issues.." என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அத்தோடு இப்போது இரண்டு விதமான பிரச்சினைகளைக் கேள்விப்பட்டேன். இந்த அனர்த்தத்தால் அநாதைகளாகப்போன இலங்கைச் சிறார்களை மேற்குலக நாடுகளிலிருந்து பலர் சுவீகரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது. நல்ல உள்ளங்கள் பல இருந்தாலும், சரியான தகவல் இல்லாமல் adoptationஜ அனுமதிக்க முடியாது. இதைச் சாட்டாக வைத்து child abusers குழ்ந்தைகளை தத்தெடுக்க முயலக்கூடும். எனவே சரியான வரைமுறைகள்/சட்டதிட்டங்கள் இல்லாமல் இலங்கையில் குழந்தைகளைத் தத்தெடுத்தல் தற்போதைக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான ஒரு அதிகாரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் மற்றொருவிதமான செய்திதான் கொடுமையானது. இந்த அசம்பாவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பெண்களை/சிறார்களை பாலியல் வல்லுறகளிற்கு உட்படுத்த பலர் முயல்வதான சம்பவங்கள். ஒரு உதாரணத்திற்கு, "..Since Friday, two other cases of suspected abuse of children were reported, including one by a man who attempted to molest his granddaughter..". UN சிறார்களுக்கான அதிகாரியும் இதுகுறித்து எச்சரிகை விடுத்துள்ளார்."In the aftermath of displacement and shock you do see an increase of abuse and violence against women and children," said Ted Chaiban, head of the U.N. children's agency in Colombo." பலவிதமான கோணங்களுடன் பலப்பிரச்சினைகளைப் பாதிக்கப்பட்டோர் சந்திக்கவேண்டி வரப்போகிறது என்பதை மேற்கூறிய சம்பவங்கள் கட்டியங்கூறுகின்றன.
.................
இவ்வளவு காலமும், தான் இலங்கையில் கால்பதிக்கவில்லையென்று சும்மா ஒளிச்சுபிடிச்சு காட்டிய நம்ம அண்ணாச்சி அமெரிக்காவிற்கு இது நல்ல சந்தர்ப்பம். ஏற்கனவே அமெரிக்காக் கொமாண்டோக்கள் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளித்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்த செய்தி என்றாலும், இது வெளிப்படையாக அமெரிக்க காலூன்றுவதற்கான நல்ல தருணம். சூனாமி பேரழிவிற்கு உதவுவதற்காய் 1500 அமெரிக்க Marines இலங்கைக்கு போகப்போவதென்ற செய்தி மிகவும் அச்சமூட்டுவதாகவே உள்ளது. திருகோணமலைத் துறைமுகத்திற்கான அமெரிக்காவின் தந்திரக்கண் நமக்கொன்றும் தெரியாதல்ல. இப்படி உதவி என்று போய் ஈழத்திலேயே நிரந்தரமாய் தங்கி நமக்கு உபத்திரம் பிறகொருபொழுதில் தரக்கூடும். இப்பவே எமது எதிர்ப்புக்குரல்களை இங்கும் ஈழத்திலும் காட்டாவிட்டால் பாரிய பின்விளைவுகள் வரக்கூடும். உதவியை அமெரிக்கா ஐ.நாவின் உபபிரிவுகளான UNICEF, WHO போன்றவற்றின் மூலம் வழங்க நாம் கட்டாயப்படுத்தலாம். அமெரிக்கா என்றால் நாயைக் காணமுன்னமே எடுடா கல்லென்று அலறுகின்ற ஜே.வி.பியும் அடக்கிவாசிக்கும்போது நாற்காலிக்கனவுகளின் 'அற்புதம்' விளங்குகின்றது. சந்திரிக்காவைப்பற்றிஒன்றும் கூறத் தேவையில்லை. யார் வந்தாலும், என்ரை நிறைவேற்று அதிகார சனாதிபதி நாற்காலிக்கு வேட்டு வைக்காவிட்டால் போதுமென்பது அவரது இன்றைய கொள்கை.
.................
என்னவோ எல்லாம் நடக்குது போங்கோ!

0 comments: