கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மரம் - ஹெர்மன் ஹெஸ்ஸே

Friday, April 27, 2018

ரு மரம் சொல்கிறது: நம்பிக்கையே எனது பலம். எனது தந்தையர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, ஒவ்வொரு இலைதுளிர்காலத்திலும் என்னிடமிருந்து வெளிவரும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறித்தும் எதுவும் அறியேன். நான் இறுதிவரை இரகசியம் நிறைந்த எனது விதையினாலே வாழ்கிறேன், அதைத் தவிர எது குறித்தும் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்குள்ளேயே இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். என்னுடைய ஊழியம் புனிதமானதெனவும் நம்புகிறேன். இந்த நம்பிக்கையினாலேயே நான் உயிர் வாழ்கிறேன்.
நாம் வாழ்வினால் பலமாகத் தாக்கப்பட்டு எம்மால் அதைத் தாங்க முடியாதபோது, ஒரு மரம் எமக்குச் சிலதைச் சொல்ல விழைகிறது. அப்படியே இரு! அப்படியே இரு! என்னைப் பார், வாழ்க்கை அவ்வளவு இலகுவானதுமல்ல, அதேபோல் அவ்வளவு கடினமானதுமல்ல. இவைகள் உன்னுடைய குழந்தைத்தனமான எண்ணங்கள். உன் ஊடாக கடவுளைப் பேச விடு, அப்போது உனது எண்ணங்கள் அமைதியாக வளரும்.
நீ மிகவும் பதற்றமாய் இருக்கிறாய் எனெனில் உனது பாதைகள் உனது தாயிடமிருந்தும் வீட்டிலிருந்தும் தொலைவிலிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காலடியும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் உனது தாயிடமே உன்னை அழைத்துச் செல்கின்றன. வீடு என்பது இங்கேயோ அங்கையோ இல்லை. வீடு என்பது உனக்குள்ளேயே இருக்கிறது அல்லது வீடு என்பதே எங்கேயும் இல்லை.
நூற்றாண்டு கால மரம் - பனாமா
மாலை நேரத்தில் காற்றில் அசையும் மரங்களின் சலசலப்பை நான் கேட்கும்போது. எனது இதயம் அலைவதற்கான காத்திருப்பை எண்ணி விம்முகிறது. ஒருவரால் நீண்டநேரத்திற்கு மரங்களின் மெளனத்தைக் கேட்கமுடியுமென்றால், அந்தக் காத்திருப்பு ஒரு விதையாக மாறுவதையும், அதன் அர்த்தத்தையும் அறியமுடியும். இது ஒரு வாதையிலிருந்து ஒருவர் தப்புகின்ற வழியெனத் தெரிவதுபோல இருந்தாலும், உண்மையில் இது அதுவல்ல. இது வீட்டிற்கான காத்திருப்பு, இது ஒரு தாயின் நினைவுக்கான காத்திருப்பு, ஒரு வாழ்விற்கான புதிய உருவகங்களுக்கான காத்திருப்பு. இது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு பாதையும் வீட்டை நோக்கியே நீள்கின்றன, ஒவ்வொரு காலடியும் ஒரு பிறப்பு, ஒவ்வொரு காலடியும் ஒரு இறப்பு, ஒவ்வொரு கல்லறையும் உனது தாயார்.
ஆக, நாங்கள் எமது குழந்தைத்தனமான எண்ணங்களுக்கு முன் குழப்பமாக நிற்கும்போது, மாலையில் மரங்கள் சலசலக்கின்றன. மரங்களுக்கு நீண்ட எண்ணங்களும், ஆழமான மூச்சிழுப்பும், அமைதியும் இருக்கின்றன. எங்களை விட நீண்ட ஆயுள் அவைகளுக்கு உண்டு. நாங்கள் மரங்களைச் செவிமடுக்காதவரை, அவைகள் எங்களை விட புத்திசாலிகளாகவும் இருக்கின்றன. நாங்கள் மரங்களைக் கேட்கத் தொடங்குபோது, சுருக்கமானதும், எளிதானதும், குழந்தைத்தனமான அவசரமான எமது எண்ணங்கள் எதனோடும் ஒப்பிடாத மகிழ்ச்சியாக மாறுகின்றன.

யாரெனினும் ஒருவர் மரங்களை எப்படி செவிமடுப்பது என்று அறிந்ததன் பிறகு அவர் ஒரு மரம் போல இருக்க வேண்டியதில்லை. அவர் என்னவாக இப்போது இருக்கிறார் என்பதைவிட வேறு எதுவும் அவருக்குத் தேவையில்லை. அதுவே அவரது வீடு. அதுவே அவரது மிகப்பெரும் மகிழ்ச்சி. -ஹெர்மன் ஹேஸே (தமிழில்: டிசே) (Apr 26, 2016)

1 comments:

வே.நி.சூர்யா said...

சரளமான மொழிபெயர்ப்பு, Highly Spiritual.. ஹெஸ்ஸேயின் எந்த புத்தகத்திலிருந்து?

5/15/2018 11:21:00 AM