tag:blogger.com,1999:blog-91432172024-03-17T09:03:24.441-04:00இளங்கோ- டிசே Elanko Dseஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger734125tag:blogger.com,1999:blog-9143217.post-12983177795588219002024-03-17T08:55:00.006-04:002024-03-17T09:02:53.593-04:00கார்காலக் குறிப்புகள் - 30 1.விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் பற்றி நிறைய அறிந்திருக்கின்றேன். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது கோயிலையல்ல, யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-86847853561418565782024-03-16T10:23:00.009-04:002024-03-16T23:16:02.628-04:00'நீர்வழிப் படூஉம்'மும், இன்ன பிறவும்.. <!--[if gte mso 9]>
<![endif]--><!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]--><!--[if gte mso 9]>
இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-50849166981393474402024-03-14T00:15:00.006-04:002024-03-14T00:25:41.433-04:00ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 03 3.‘இளமையில் இருக்கும்போது தத்தளிப்புக்களுடனும், பதற்றங்களுடனும் எல்லாவற்றோடும் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருப்போம். மத்திய வயதுக்கு வந்தவுடன் எதற்காக ஓடிக்கொண்டிருக்கும் என்கின்ற கேள்விகள் மனதில் எழும். வயது முதிர்கையில் இவை எல்லாமே எவ்வளவு முட்டாள்தனமாவை என்பது விளங்கியிருக்கும். அப்போது மரணம் அல்லது மரணத்திற்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. நான் மறுபிறப்பை இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-45625340060367992362024-03-12T23:35:00.002-04:002024-03-12T23:40:02.245-04:00ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 02 2.'To be silent the whole day long, see no newspaper, hear no radio, listen to no gossip, be thoroughly and completely lazy, thoroughly and completely indifferent to the fate of the world is the finest medicine a man can give himself.'-Henry Millerஹென்றி மில்லர் தனக்கு மிகப் பிடித்த நாவல்களில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வைக் குறிப்பிடுகின்றார். ஸென்னை பற்றிக் குறிப்பிடாமல் அது இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-86203524393453971232024-03-12T12:03:00.003-04:002024-03-12T12:17:22.658-04:00ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி
1.
ஹென்றி
மில்லர்
என்றவுடனேயே
எமக்கு
அவரின்
சிற்றின்ப
(Erotica) எழுத்துக்களே உடனே நினைவுக்கு வரும். அவரின் இந்தவகை நாவல்கள் அமெரிக்காவில் நீண்டகாலம் தடை செய்யப்பட்டும் இருந்ததால் ஹென்றி இவ்வாறு அடையாளப்படுத்துவதும் ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியதுதான். அதேவேளை ஹென்றி அமெரிக்காவில் எதிர்க் கலாசாரத்தை எழுத்தில் கொண்டு வந்தவராக, மேற்குலகின் தொழில்புரட்சியையும், நுகர்வோர் வெறித்தனத்தையும் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-5938449673888780272024-03-11T10:00:00.005-04:002024-03-11T12:02:22.233-04:00இனியொரு பொழுதுமில்லா வாழ்வு..! சிலவேளைகளில் சற்று நிதானித்து காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் அது எவ்வளவு வேகமாய் விரைந்து செல்கின்றது என்கின்ற திகைப்பு வரும். கடந்தகாலம் ஒரு சிறு கடுகைப் போலச் சுருங்கி நம் உள்ளங்கையில் மிதப்பது போலத் தோன்றும். ஒருகாலத்தில் எவையெல்லாம் முக்கியமென்று கடுமையாகப் போராடியவையும், மன்றாடியவையும் இப்போது அதன் சுவடுகளேயில்லாது கரைந்து போயிருக்கும். அவ்வாறுதான் நிகழ்காலத்தில் நாம் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-23813647379300356472024-03-09T00:31:00.004-05:002024-03-09T00:31:59.678-05:00 தியானமும், பயணங்களும், நூல்களும்...! சில நாட்களுக்கு முன் தியானம் செய்வதற்கு அமர்ந்திருந்தபோது ஒரு தெளிவான காட்சியொன்று ஓடியது. தியானத்தில் இருக்கும்போது நமது கடந்தகால Traumaகள் மேலே மிதந்தபடி வரத் தொடங்கும் எனச் சொல்வார்கள். முக்கியமாக குழந்தமைக்கால மனவடுக்கள் நமக்கு அவ்வளவு தெரிவதில்லை. நாம் நமது மனவடுக்களை மட்டுமல்ல, நமது பெற்றோர், அவர்களின் பெற்றோர், அதற்கு முன்னிருந்த நம் மூதாதையரின் மனவடுக்களையும் தாங்கிக் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-4249535159333690892024-03-06T22:24:00.002-05:002024-03-06T22:30:06.000-05:00பரிசுத்தக் கண்ணீர்! நேற்று ஒரு நண்பர் திரைப்படமொன்றைப் பார்த்துவிட்டு அதில் வரும் முக்கியபாத்திரம் என் சாயலை ஒத்திருந்தது என்றார் (Saw this amazing movie and the actor reminded me of your features). என்னைப் போல ஒருவரையெல்லாம் திரையில் காட்டுவார்களா என்று வியப்பிருந்தாலும், எப்படியோ தேடி அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தேன். எப்போதுமே எதிர்ப்பார்ப்பின்மைகளின் அழகியலே என்னை வசீகரிப்பதுண்டு. அது பயணமாகவோ,இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-21997165678405740802024-03-05T20:50:00.005-05:002024-03-06T20:50:30.987-05:00 நான் வாரணாசிக்குப் போகும் கதை!எனது வங்கியில் அவ்வப்போது ஒரு Financial Advisor ஐ சந்திப்பேன். அவர் காசியைச் சேர்ந்தவர். இம்முறை சந்தித்தபோது இங்கே பிறந்த தனது மகளை நாளாந்தாவுக்குக் கூட்டிச் சென்றேன், இப்படியொரு பல்கலைக்கழகம் அந்தக் காலத்திலேயே இருந்ததா என மகளுக்குத் திகைப்பாக இருந்தது என்றார். அவர் இந்துவாகப் பிறந்தாலும் புத்தர் மீது அதிக ஈர்ப்புடையவர் என்பதால் அவரோடு உற்சாகமாக உரையாடல் போகும். அவரின் பிள்ளைகளில் ஒருவர் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-73896636028113017832024-03-05T00:38:00.000-05:002024-03-05T00:38:44.743-05:00கனவுகளின் தீபங்களில் எரிந்தணைதல் எனது புதிய நூலைத் திருத்தம் செய்யும் நண்பரொருவர், 'உனக்குத் தனித்து வாழ்ந்தவர்களை அல்லது நிறையக் காதலிகளை வைத்திருந்த படைப்பாளிகளைத்தான் அதிகம் பிடிக்கின்றது' என்று ஓர் அவதானத்தை முன்வைத்தார். இப்படியான குறிப்பிட்ட காரணங்களுக்காய் இந்த எழுத்தாளர்களைத் தேடி வாசிக்கவோ, எழுதவோ செய்யவில்லையெனினும், அவ்வாறான படைப்பாளிகள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் என்னை அதிகம் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-68997376016231302542024-03-03T09:02:00.002-05:002024-03-03T10:01:25.865-05:00Argentina 1985 போர்கள் என்பது மானிடர்கள் அவமானத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டிய பேரவலம் தருகின்ற ஓரிடம். ஆனாலும் யுத்தங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நிகழ்த்தபட்டுக் கொண்டேயிருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கா நாடுகள் பல காலத்துக்காலம் தமக்கான விடுதலைக்கான போராட்டங்களைக் கொண்டிருந்தன. அவ்வாறு 1970களின் பிற்பகுதியில் ஆர்ஜெண்டீனாவின் ஜனாதிபதியாக இருந்த பெரோனின் மனைவியைத் துரத்திவிட்டு, இராணுவம் ஆட்சியைக் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-70279722132511505782024-03-01T14:40:00.001-05:002024-03-01T14:48:47.995-05:00 கார்காலக் குறிப்புகள் - 29எனக்கிருக்கும் தொலைதூரத்து
நண்பர்களில் அநேகம் இலக்கியம் சார்ந்து பரிட்சயமானவர்கள்தான். ஆனால் அவர்களிலும் நான் அதிகம் தேடிப்
போவது எங்கேனும் ஒரு மூலையில் தம்மியல்பில்
எழுதி, வாசித்துக் கொண்டிருப்பவர்களை! அவர்களை வெஸ் அண்டர்சனின் “வூட்டாபெஸ்ட்
ஹொட்டலில்’ வரும் இரகசிய இயக்கமான “Society of the
Crossed Keys” போல நான் கற்பனை செய்துகொள்வதுண்டு.
பயணமொன்றின் நடுவில்
நின்றபோது நண்பரொருவரைச் சந்தித்தேன். இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-73697651080297739162024-02-29T22:35:00.002-05:002024-02-29T22:39:53.454-05:00படைப்பாளியும், வாசகரும்..! அண்மையில் நானும் நண்பரொருவரும் ஒரு கதையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அந்தக் கதை மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அந்த எழுத்தாளரை விரிவாக வாசித்தவன் என்றவகையில் அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் நண்பர் அந்தக் கதையில் வந்த சில வரிகள் மிக முக்கியமானவை. அதிலிருந்து நமது வாசிப்பு அனுபவத்தை வேறுவிதமாக வார்த்துக் கொள்ளலாம் என்றார். நான் அந்தத் திசையில் நின்று அதுவரை யோசிக்கவில்லை. இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-89629515833419240562024-02-28T22:27:00.001-05:002024-02-28T22:27:04.144-05:00ஹென்றி மில்லரும், ஜூனும்.. ஹென்றி மில்லருக்கு இயந்திரத்தனமான அமெரிக்க வாழ்க்கை ஒரு கட்டத்தில்
வெறுக்கின்றது. அவர் தனது வேலையைத் துறந்துவிட்டு பிரான்ஸுக்குப் போய் விடுகின்றார்.
அதன்பிறகு 10 வருடங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பாமல் பிரான்ஸில் இருக்கின்றார். ஐரோப்பாவைச்
சூழ்ந்த 2ம் உலக மகாயுத்தம் அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றது. ஹென்றி
மில்லர் பிரான்ஸில் இருந்தபோதே அவரின் Tropic of Cancer மூலம் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9143217.post-67430024762979915782023-12-26T10:40:00.009-05:002023-12-26T10:43:13.925-05:00நெப்போலியன் - இறுகப்பற்று - Pain Hustlers 1, நெப்போலியன்
மிகச்
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பேரரசனாக வரமுடியும் என்று வரலாற்றில்
நிரூபித்தவர் நெப்போலியன். பிரான்ஸை நேசித்தவர் என்பதால் அந்தப் பேரரசுக்
கனவுக்காய் 61இற்கு மேற்பட்ட போர்களை நடத்தி மில்லியன்கணக்கில் சொந்த நாட்டு
மக்களையே பலிகொடுத்தவர். வெளியில் போர்களை நடத்துவதில் பெருமிதம் கொண்ட
நெப்போலியன் ஒரேயொருவருக்கு மட்டும் தலைகுனிந்தவர் என்றால் அது அவரின் மனைவியான
இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-18274660011835214712023-12-08T23:42:00.007-05:002023-12-08T23:44:03.284-05:00கார்காலக் குறிப்புகள் - 28 சூனியம்
************
சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்புக்குப் போனதும் அங்கே நடந்தது
பற்றியும் ஏற்கனவே இங்கே எழுதியிருக்கின்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவம் இது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு வடகோவையார் அரச போக்குவரத்து பேரூந்தில்
வந்து கொண்டிருந்தார். நீண்ட பயணங்களின்போது அவ்வப்போது சில இடங்களில் பயணிகள்
தேநீர் குடிக்க/கழிவறைகளை உபயோகிக்க என நிறுத்துவது வழமைதானே. பஸ்சில் வந்த இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-11983959025032733662023-12-02T10:55:00.005-05:002023-12-02T11:01:45.714-05:00மெக்ஸிக்கோ வாசிப்பனுவம் -சுகிர்தா இனியா
நாவல் : மெக்ஸிக்கோ
நாவலாசிரியர் :
இளங்கோ
இளங்கோவின்
மெக்ஸிக்கோ தான் எனது சிறிது கால வாசிப்பு இடைவெளிக்குப் பிறகு நான் முழுவதுமாக
படித்து முடித்த நாவல். இளங்கோவின் எழுத்தின் மீது எனக்கு அதீத ஒட்டுதல் உண்டு.
காரணம் என்னால் பத்திக்கு பத்தி தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளக்கூடிய எழுத்தாக
அவருடைய எழுத்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக முகப்புத்தகத்தில் அவருடையஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-43214974182671103092023-11-13T23:30:00.001-05:002023-11-13T23:30:24.475-05:00சட்டகங்களுக்கு அப்பால் மிஞ்சுபவை Dead Poets Society திரைப்படத்தில்
ஆசிரியரான ரொபின் வில்லியம்ஸ் தனது மாணவர்களுக்கு ஏற்கனவே அந்தப் பாடசாலையில் படித்தவர்களின் கறுப்பு-வெள்ளைப்
புகைப்படங்களை ஓரிடத்தில் காட்டுவார். இவர்கள் உங்களைப் போல இதே பாடசாலையில் 30 வருடங்களுக்கு
முன்னர் படித்தவர்கள். என்னதான் முயன்றாலும் இறுதியில் இறப்பென்பது
இவர்களைப் போன்று உங்களுக்கும் உறுதியானது. நீங்கள் இதற்கிடையில் எப்படி உங்களுக்கு
விரும்பியஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-81572570250874402072023-11-12T11:37:00.006-05:002023-11-12T11:39:37.992-05:00 காலத்தின் முன் தொலைந்து போகாத படைப்பாளிகள் 1.நான் திரைப்படம் குறித்து எழுதிய முதல் விமர்சனம் ‘Finding Forrester’ என நினைக்கிறேன். இந்தத் திரைப்படத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தேன். அதன் பாதிப்பில் ஒரு விமர்சனம் எழுதி, அது வெளியான பத்திரிகையொன்றில் வெளிவந்தது. ஒரு கறுப்பின பதின்மனுக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இடையில் மலரும் நட்பைப் பற்றிய படமது. எழுத்தாளர் புலிட்ஸர் விருது பெற்ற படைப்பாளி என்றாலும் எல்லா இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-44239344991669242032023-11-05T10:14:00.010-05:002023-11-05T10:42:43.542-05:00கார்காலக் குறிப்புகள் - 27வாழ்க்கையில் கடினப்பட்டுத்தான்
ஒவ்வொரு படியும் மேலே ஏற வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறியும் கொஞ்சம் நிதானமாக அதை
இரசிக்கவிடாது, இன்னொரு கனவு கிளைத்தெழும் அல்லது
திருப்தியின்மை படரும். இவ்வாறு எத்தனங்களால் எத்தனப்படாத ஒரு நிதானமான வாழ்வு
எப்போது அமையுமென்று நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. நண்பரொருவர் ஆறு வருடங்கள்
இங்கிலாந்தில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முன் இந்தியாவில் சில
வருடங்கள் இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-61380376277351528362023-10-29T11:50:00.007-04:002023-10-29T11:51:25.906-04:00மெக்ஸிக்கோ ஒரு வாசிப்பு அனுபவம்நன்றி: கிருஷ்ணா
வணக்கம் இளங்கோ,
ஆடி மாதம்
மெக்ஸிக்கோவில் வாசிப்போம் என்றிருந்த
மெக்ஸிக்கோவை இப்போது தான் மகனை நீச்சலுக்கு விட்டு விட்டு காத்திருக்கும்
நேரத்தில் வாசிக்கிறேன். அரை
மணித்தியாலத்தில் ஒரே மூச்சாக பதினொரு அத்தியாயங்களை வாசித்து விட்டு இப்போது அசை
போடுகிறேன். அனுபவித்து
எழுதியிருக்கிறீர்கள்.
1 1/2
மணித்தியாலங்களில் 30 அத்தியாயங்களை
இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-66596879204399772652023-10-23T23:29:00.004-04:002023-10-23T23:29:55.515-04:00கார்காலக் குறிப்புகள் - 26 சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பார்த்திபன் ஜேர்மனியில் இருந்து
வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த வெவ்வேறு
மொழிகளில் நிகழ்த்தபட்ட concert காணொளிகள்/பாடல்கள்/திரைப்படங்கள் நிரம்பிய memory stick ஒன்றை
எனக்கு அன்பின் நிமித்தம் தந்திருந்தார். தற்செயலாய் என் கணனியில் அதைத் திறந்து
பார்த்தபோது, ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னையில் 2016இல்
நடந்த இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-10342585730217705522023-10-21T09:54:00.004-04:002023-10-24T00:25:12.818-04:00கார்காலக் குறிப்புகள் - 25 -ஓர் இலையுதிர்கால
நடை-
நிறம் மாறும்
இலைகள். இலைகளை உதிர்க்கும் மரங்கள்.
வர்ணங்களின்
பேரழகும், உதிர்வின்
பிரிவும் இரண்டறக் கலந்து மனதை ஏதோ சொல்ல முடியாத உணர்வில் ஆழ்த்தும்
இலையுதிர்காலம் இனி இங்கு.
கோடையைப் போல
வெயில் புன்னகைக்கின்ற இந்த நாளில் நான் நடந்தபடியிருக்கிறேன்.
பச்சை/மஞ்சள்/சிவப்பு என எவ்வளவு பார்த்தும் ஒருபோதும் தெவிட்டா மரங்களின்
மாயஜாலங்களையும், இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9143217.post-17523782726961011072023-10-09T22:39:00.002-04:002023-10-09T22:41:41.266-04:00கார்காலக் குறிப்புகள் - 24 இன்றைக்கு அப்பிள்களைப் பறிப்பதற்காக ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். சில பண்ணைகளில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிட்டு, எங்களை நாம் விரும்பிய மரக்கறிகளை, கனிகளைப் பறிக்க விடுவார்கள்.
நானும் நண்பரும் இந்தப் பண்ணைக்குப் போனபோது நாங்கள் எடுத்த நுழைவுச் சீட்டுக்கு பூசணிக்காயையோ (பரங்கிக்காய்),
butternut squashயோ ஒவ்வொன்று பறித்துக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார்கள். இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143217.post-45143539217103245122023-10-08T23:42:00.004-04:002023-10-08T23:46:37.389-04:00கார்காலக் குறிப்புகள் - 23ஒருநாள் கழிந்தது..
இன்று ஹென்றி
மில்லரின் 'The Books in my life'ஐ எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்றிருந்தேன்.
அதை இரவில் பெறுவதற்கு முன், நூலகத்தின் தமிழ்ப்பகுதிக்குச் சென்று நோட்டமிட்டேன். இங்கு எந்த நூலகத்துக்குப் போனாலும் அது நான்
வழமையாகச் செய்கின்ற ஒரு சடங்கு. கோவிட்டுக்குப் பிறகு, கடந்த சில வருடங்களாக
புதுத் தமிழ்ப் புத்தகங்களின் வரவைக் காணவில்லை. இங்கு மட்டுமில்லை, இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com0